Monday, May 11, 2009

நம் கலாசாரத்தின் இன்னும் ஒரு அவலம்..

நான் ஒரு நாத்திகனாக இருந்தும் பெற்ரோரின் வட்புறுத்தலினால் சென்ற மூன்று நாட்களாக கும்பகோணம், மயிலாடுதுறை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோயில்களிட்கு சென்றுருந்தேன், ஒரு ஆன்மீக பயணமாக...கோயில்களின் கட்டிட கலை பிரமிக்கவைக்கின்றன. நான் கோவை, திருப்பூர், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளையே பார்த்து வளர்ந்ததினால், ஒரு ஊரை சுற்றி இத்தனை அழகான  கோயில்களா, நம் முன்னொர்கள் இவ்வளவு பொக்கிஷங்களை விட்டுசென்றுள்ளார்கள் என்று எண்ணும் பொழுது அதை காக்க எவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டும் என மனதிற்குள் ஒரு சிறு ஆசையேனும் வரவில்லை என்றாள் நாம் கலை, கலாசாரம் என்று பேசுவதில் உள்ள நெருடல்கள் நம் ஆழ்மனம் அறியும். அறிந்துவிட்டு போகட்டும் என்பது நம் தமிழ் sorry, டமிழ் பண்பாடு. ஆனால் ஒன்று மட்டும் நிதர்ஷனம், இந்திய சுகாதர சீர்கேடின் ஒட்டு மொத்த உருவம் நம் புனிதஸ்தலங்கள் என்பதே அது. Enviromental Health, Public Health, Nutrition, Diseases Control & Management, Disaster preparedness, Micronutrient Deficiency Control, Pollution Control, Sewage and Wastage treatment, Traffic congestion, என்று பிதற்றுபவர்கள் இந்த விஷயத்தை எப்படி மறந்தார்கள் என்று எண்ணும் பொழுது அவர்களின் கலாசாரப்பிணைப்பு என் நெஞ்சை துளையிட்டு குருதியை களைகிறது. If you have real guts, i suggest you to enter once in such a holy place, you'll get all kinda diseases except AIDS. மிக விரைவில் இந்த ஆளில்லா கட்டிட கலைகளில், இரவு நேரங்களில் இன்றைய ஆன்மீகவாதிகளால் ஏற்படும் molecules change-கலைகளின் காரணமாக AIDSம் கூட சாத்தியமே. அதிலும் இந்த காலணிகளை விட்டுவிட்டு உள்ளே செல்வது இன்னும் ஒரு அபத்தம், கோயில் அர்ச்சகர் தரும் தன் வியர்வை கலந்த தீர்த்தம் அடுத்த அசிங்கம், அதிலும் குடிதண்ணீர் என்று கோயிலில் வரும் தண்ணீருக்கு TASMAC பானங்கள் தேவாமிர்தம், இதற்கு side-dish-ஆக டாஸ்மாக் பார்களில் கிடைப்பதை விட அவலமான பிரசாதங்கள் வேறு, இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக எந்த கோயிலிலும் கழிவறை என்பதே அதன் சுற்றுச்சுவர் என்பதுதான். இன்னும் இப்படி நிறைய எழுதலாம், ஆனால் என்ன பயன் என்று எண்ணினால் அது உச்சகட்ட அபத்தம்!    

No comments: